விளையாட்டுப் போட்டியில் 81 வயது பாட்டி அசத்தல்!
பெங்களூரு: செப்.20-2019
முதியோருக்கான விளையாட்டுப் போட்டியில் 81 வயதுள்ள பாட்டி முதல் பரிசைப் பெற்றார்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் ஒன்றாம் தேதி உலக முதியோர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதியோரை உற்சாகப்படுத்தி ஆறுதல் அளிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில், கர்நாடக அரசு சார்பில் மூத்த குடிமக்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் பெங்களூருவில் உள்ள காண்டீவரா ஸ்டேடியத்தில் நடந்தன.
இந்தப் போட்டிகளில், சுமார் 250 முதியவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உற்சாகமாக விளையாடினர். இதில், 71 முதல் 80 வயது வரையிலான முதியோர் பிரிவினருக்கான 200 மீட்டர் நடைப் போட்டியில், 72 வயது லலிதாம்மா முதலிடத்தைப் பிடித்தார். 100 மீட்டர் நடைப் போட்டியில் 81 வயது சரோஜாம்மா முதல் பரிசை பெற்றார்.
முதியோர் இல்லங்களில் தங்கியிருக்கும் ஏராளமான முதியவர்களும் இந்தப் போட்டியில் பங்கேற்று மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்தனர்.